Published : 25 Nov 2018 11:28 AM
Last Updated : 25 Nov 2018 11:28 AM
2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்று சாதனை படைப்பார் என்று பாட்மிண்டன் ஜாம்பவானும், முன்னாள் உலக சாம்பியனுமான ரூடி ஹர்டானோ கூறினார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அமைந் துள்ள ஹட்சன் பாட்மிண்டன் பயிற்சி மைய வீரர்களுக்கு ரூடி ஹர்டானோ பயிற்சியளித்தார்.
பின்னர் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி: 2016-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்று வரை சென்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக தங்கத்தை இழந்தார். தற்போது சிந்துவுக்கு 23 வயதாகிறது. இன்னும் 2 ஆண்டுகள் வரை அவர் தரவரிசையில் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருப்பார்.
டோக்கியோவில் அவர் தங்கம் வென்று சாதனை படைப்பார் என்பது எனது கணிப்பு. டோக்கியோவில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப் படுத்துவார் என்பது எனது நம்பிக்கை.
ஆல் இங்கிலாந்து, உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போன்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கவனம் செலுத்தவேண்டும். அது ஒலிம்பிக் போட்டிக்கு உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT