Published : 28 Nov 2018 10:21 AM
Last Updated : 28 Nov 2018 10:21 AM

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை வெல்வோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என்று இந்திய கிரிக் கெட் அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா நம்பிக்கை தெரி வித்தார்.

இதுகுறித்து சிட்னியில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் எங்களுக்கு சவால் மிகுந்ததாக இருக்கும். இந்தத் தொடர் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதை நாங் கள் பயன்படுத்திக் கொள்வோம்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த் துவது கடினமான பணியாக இருக்கும்.

டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாளை தொடங்கும் பயிற்சி ஆட் டம் எங்களுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும். இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப எங்கள் உடலை பழக்கப்படுத்திக் கொள்ள அந்த ஆட்டம் உதவும்.

தொடரை வெல்லவேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் நாங்கள் வந்துள்ளோம். தனிப்பட்ட முறையில் சாதனை புரிய நாங்கள் வரவில்லை. அணி வீரர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு தொடரை வெல்லவேண்டும் என் பதுதான். அதற்கான திட்டமிடலும், சாதுர்யங்களும் எங்களிடம் உள் ளன.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும், சுழற்பந்துவீச்சும் பலமாக உள்ளது. எனவே எதிரணிக்கு நிச்சயம் சவால் அளிக்கும் வகையில் பந்துவீசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x