Last Updated : 08 Nov, 2018 09:01 AM

 

Published : 08 Nov 2018 09:01 AM
Last Updated : 08 Nov 2018 09:01 AM

ஐ.எஸ்.எல். கால்பந்து; முதல் வெற்றியைப் பதிவு செய்த சென்னையின் எப்சி அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் தொடரில் சென்னையின் எப்.சி. அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புனே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்றுமுன்தினம் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

போட்டியின் 9-வது நிமிடத்தில் புனே அணியைச் சேர்ந்த வீரர் குர்னியன் முதல் கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுப்பது போல, சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வதுநிமிடத்திலும், தோய் சிங் 72வதுநிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தனர்.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் புனே அணியை சேர்ந்தஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலையைக் குறைத்தார். இறுதிவரை இந்த நிலை நீடிக்கவே சென்னை அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

இதன் மூலம் இந்தத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னையின்எப்.சி. அணி. இந்த வெற்றியின் மூலம் 7 ஆட்டங்களில் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு சென்னையின் எப்சி அணி முன்னேறியுள்ளது. எப்.சி. புனே சிட்டி அணி 2 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x