Published : 02 Aug 2014 10:00 AM
Last Updated : 02 Aug 2014 10:00 AM
காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் காஷ்யப் 21-13, 21-10 என்ற நேர் செட்களில் மலேசியாவின் டேரன் லியூவைத் தோற்கடித்தார். அரையிறுதியில் இங்கிலாந்தின் ராஜீவ் அவுசெப்பை சந்திக்கிறார் காஷ்யப்.
மகளிர் ஒற்றையர் காலிறுதியில் பி.வி.சிந்து 21-10, 21-9 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் அன்னா ரேங்கினை தோற்கடித்தார். சிந்து தனது அரையிறுதியில் கனடாவின் மிச்செலே லீயை எதிர்கொள்கிறார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT