Published : 29 Nov 2018 10:54 AM
Last Updated : 29 Nov 2018 10:54 AM
கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன், இந்திய அணிகளுக்கு இடையிலான 4 நாள் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது.
மழை நின்றதும் மைதானத் தில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர் கள் ஈடுபட்டனர். ஆனால் மைதா னம் ஈரப்பதமாக இருந்ததால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து 2-ம் நாள் ஆட்டம் முதல் அரை மணி நேரம் முன்னதாகவே ஆட்டம் தொடங்கப்படும் என்று போட்டி நடுவர்கள் அறிவித்துள்ளனர். 2-ம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்காது என அங்குள்ள வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT