Published : 07 Nov 2018 01:08 PM
Last Updated : 07 Nov 2018 01:08 PM
ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி புதிய லிஸ்ட் ஏ கிரிக்கெட் உலக சாதனையை நியூஸிலாந்தின் ஜோ கார்ட்டர், பிரெட் ஹாம்ப்டன் ஆகியோர் ஏற்படுத்தியுள்ளனர். புதனன்று ஹாமில்டனில் இருவரும் வடக்கு மாவட்ட அணிக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தினர்.
செண்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியின் வில்லம் லூடிக் என்ற மித வேகப்பந்து வீச்சாளர் ஓவரில் 43 ரன்களை கார்ட்டர், ஹாம்ப்டன் ஜோடி விளாசி சாதனை படைத்தது.
வங்கதேசத்தைச் சேர்ந்த அலாவுதீன் பாபு என்ற வீச்சாளர் முதல் தர கிரிக்கெட்டில் 39 ரன்களை ஒரே ஓவரில் கொடுத்ததே சாதனையாக இருந்தது, அப்போது ஜிம்பாப்வே வீரர் எல்டன் சிகும்பரா 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை (ஒரு நோபால்) விளாசினார்.
ஹாமில்டனில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் ஹாம்ப்டன் முதலில் 4 அடித்தார் பிறகு இடுப்பளவு புல்டாஸ் நோ-பால்கள் இரண்டையும் சிக்ஸ் அடித்தார். பிறகு 3வது சிக்சரையும் அடித்து சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை கார்ட்டரிடம் கொடுத்தார், இவர் கடைசி 3 பந்துகளையும் சிக்ஸ் அடித்து சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்தார்.
அந்த ஓவர் 4,6,6, 6,1, 6,6,6 என்று அமைந்தது, இரு நோபால்களுக்கு 2 ரன்கள் சேர்த்து 43 ரன்கள் ஒரே ஓவரில். லூடிக்கின் பந்து வீச்சு முதலில் 9 ஓவர்கள் 42 என்று இருந்தது பிறகு 10 ஒவர்கள் 85 ரன்கள் என்று ஆகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT