Published : 29 Nov 2018 10:49 AM
Last Updated : 29 Nov 2018 10:49 AM
ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரில் இன்று சென்னை யின் எப்.சி. அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணியும் மோதவுள்ளன.
சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
நடப்பு சாம்பியனான சென் னையின் எப்.சி. இந்த சீசனில் இதுவரை 4 புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது. 8 லீக் ஆட்டங் களில் விளையாடியுள்ள சென் னையின் எப்.சி. அணி இது வரை ஒரே ஒரு லீக் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. ஒரு டிராவைப் பெற்றுள்ள சென்னையின் எப்.சி. அணி இதுவரை 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இதனால் இன்று நடை பெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வெல் லும் நோக்குடன் சென்னையின் எப்.சி. களமிறங்கும் என்ப தில் சந்தேகமில்லை.
அதே நேரத்தில் கேரளா பிளாஸ் டர்ஸ் அணி 8 போட்டி களில் பங்கேற்று ஒரு வெற்றி, 4 டிரா, 3 தோல்விகளைப் பெற்று 7 புள்ளிகளுடன் உள்ளது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT