Published : 03 Oct 2018 08:41 AM
Last Updated : 03 Oct 2018 08:41 AM
போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பிரபலமான கால்பந்து வீரராக இருப்பவர் ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணிக்காகவும், யுவென்டஸ் கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்கா வின் நெவேடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் கேத்தரின் மயோர்கா, கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது பாலியல் புகாரைக் கூறியுள்ளார். 2009-ம் ஆண்டு லாஸ் வேகாஸிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கேத்தரின் அந்தப் புகாரில் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருப்பதற்காக தனக்கு 3,75,000 அமெரிக்க டாலர்கள் தருவதாகவும் ரொனால்டோவின் வழக்கறிஞர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து 2009-ல் இந்த வழக்கு போலீஸ் நிலையத்துக்கு வரவில்லை.
இந்த நிலையில் வழக்கை மீண்டும் தொடர வேண்டும் என்று போலீஸாரிடம் கேத்தரின் புகாரில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ரொனால்டோ மீது லாஸ் வேகாஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப் பட்டுள்ளது என்றும், தன் பெயரைக் கெடுக்க இதுபோன்ற செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்றும் ரொனால்டோ கூறி யுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT