Published : 05 Oct 2018 07:31 PM
Last Updated : 05 Oct 2018 07:31 PM
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் வறண்ட வெயில் நாளில் இன்று ஒரு சம்பவம் நடந்தது, அது இன்னிங்சின் 12வது ஓவரில் நடந்த ரன் அவுட் சம்பவமாகும்.
மே.இ.தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்து கடும் திணறலில் இருந்த போது அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை ஹெட்மையர் மிட் ஆனில் அடித்தார், அது நேராக ஜடேஜா கையில் வந்தது, இதைப் பார்க்காத ரன்னர் சுனில் அம்ப்ரிஸ் விறுவிறுவென பேட்டிங் முனைக்கு ஓடினார். ஹெட்மையரும், அம்ப்ரிசும் ஒரே முனையில், தாண்டியே சென்று விட்டார் அம்ப்ரிஸ்.
பந்தை எடுத்த ஜடேஜா ஸ்கூல் கிரிக்கெட் ஆட்டத்தில், தெரு கிரிக்கெட்டில் செய்வது போல் மெதுவாக பந்தை எடுத்துக் கொண்டு அவரே ஸ்டம்ப் அருகே நடந்து வந்தார், இதைப்பார்த்த ஹெட்மையர் ரன்னர் முனைக்கு வெகுவேகமாக ஓடிவரத் தொடங்கினார். இதைப்பார்த்தவுடன் பந்தை நேரடியாக ஸ்டம்பில் அடித்தார் ஜடேஜா, ஹெட்மையர் ரன் அவுட்தான், ஆனால் கடைசி நிமிடத்தில் த்ரோ ஸ்டம்பில் படாமல் சென்றிருந்தால் என்ன என்பதுதான் கேள்வி.
கோலியே இதனை ஜடேஜாவிடம் தெரிவித்தது போல்தான் தெரிந்தது, அதாவது மெதுவாக வேண்டுமென்றே வந்து விட்டு கடைசியில் அவர் ஓடி வருவதைப் பார்த்து நேரடியாகத் த்ரோ செய்யும் போது மிஸ் ஆகியிருந்தால் அது ரன் அவுட்டைவிடவும் காமெடியாகியிருக்கும் என்பதுதான் கோலியின் சிறு கோபத்துக்குக் காரணம்.
ட்விட்டர் வாசிகளும் இந்த ரன் அவுட் பற்றி இதே கேள்வியை கேட்டு ட்வீட் செய்தனர். அதாவது கடைசியில் பந்தை ஸ்டம்ப் நோக்கி ஜடேஜா த்ரோ செய்த போது அது மிஸ் ஆகியிருந்தால் பெரிய காமெடியாகியிருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்துமாகவும் இருந்தது. ஆனால் ஒருசிலர் ஜடேஜாவின் முயற்சி அலட்சியமானது என்று சாடியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT