Published : 03 Oct 2018 03:12 PM
Last Updated : 03 Oct 2018 03:12 PM

டெஸ்ட்டில் பிரிதிவி ஷா அதிரடி முறைகளைத் தொடர வேண்டும்: ரஹானே

ராஜ்கோட்டில் மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிரிதிவி ஷா களம் காண்கிறார். இவர் சச்சின் டெண்டுல்கரின் ஆசி பெற்றவர், சிறந்த ஆக்ரோஷமான வீரரும் கூட. இவரது ஆட்டத்தைப் பார்த்த பலரும் சச்சின் ஆடுவது போலவே உள்ளது என்றும் பாராட்டியுள்ளனர்.

சேவாகிற்குப் பிறகு ஒரு ஆக்ரோஷமான தொடக்க வீர்ரை இந்திய அணி தேடிக்கொண்டிருந்தது, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு ஆக்ரோஷம் தேவைப்படும் நிலையில் பிரிதிவி ஷாவுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அஜிங்கிய ரஹானே பிரிதிவி ஷா பற்றி கூறும்போது, “நான் கண்டிப்பாக அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன். அவர் இளம் வீரராக இருக்கும் காலத்திலிருந்தே அவரைக் கவனித்து வருகிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாகவே பயிற்சி செய்திருக்கிறோம்.

ஷா அடித்து ஆடக்கூடியவர். மும்பைக்காக பிரமாதமாக ஆடிவருகிறார். இந்தியா ஏ அணிக்காகவும் சீரான முறையில் நல்ல ஸ்கோர்களை எடுத்துள்ளார். ஆகவே முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக ஆடி தொடர்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

அவர் இந்தியா ஏ, மும்பைக்காக எப்படி ஆடினாரோ அப்படியே டெஸ்ட்டிலும் ஆட வேண்டும் என்று விரும்புகிறேன்.

புதிதாக அணிக்கு வருபவர்கள் தங்கள் எதிர்காலத்தை யோசிக்காமல் களத்தில் இறங்கி தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு என்ன ஆகும் என்றேல்லாம் யோசிக்கக் கூடாது” என்றார் ரஹானே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x