Published : 26 Oct 2018 09:17 AM
Last Updated : 26 Oct 2018 09:17 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று கொல்கத்தாவுடன் சென்னை மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விவேகா னந்தா யுவ பாரதி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணி, அட்லெடிகோ டி கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.

கொல்கத்தா அணி இந்த சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கேரளா அணிக்கு எதி ரான முதல் ஆட்டத்தில் 0-2 என தோல்வியடைந்த கொல்கத்தா அணி, நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 0-1 என வீழ்ந்தது. ஆனால் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடைசியாக ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்திருந்தது கொல்கத்தா அணி.

அதேவேளையில் சென்னை அணி 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. ஹாட்ரிக் தோல்வி பெற்ற அந்த அணி கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்தது. இதனால் ஒரு புள்ளி மட்டும் பெற்று பட்டியலில் 9-வது இடம் வகிக்கிறது சென்னை அணி.

சென்னை அணியின் பயிற்சியா ளர் ஜான் கிரகோரி கூறுகையில், “டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் மிக எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டும்.கோல் அடிப்பதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அவற்றை சரியாக நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அதேவேளையில் டிபன்ஸில் சிறப்பாக செயல்பட்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் நாங்கள் 29 புள்ளிகளை பெற வேண்டும். அதை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x