Published : 13 Oct 2018 09:21 PM
Last Updated : 13 Oct 2018 09:21 PM

ரிஷப் பந்த் சூப்பர் ஸ்டாராகி விடுவார்: மைக்கேல் வான்

இங்கிலாந்தில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்திய ரிஷப் பந்த், ராஜ்கோட்டில் மே.இ.தீவுகளுக்கு எதிராக சத வாய்ப்பை நெருக்கமாக வந்து கோட்டை விட்டார்.

இங்கிலாந்து ஓவலில் 117 பந்துகளில் சதம் கண்டு கிரிக்கெட் பண்டிதர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த ரிஷப் பந்த் அன்று ராஜ்கோட்டில் தன் 2வது சதம் எடுக்கும் முன்பாக 92 ரன்களில் பிஷூ பந்தை அடிக்கப்போய் முன் விளிம்பில் பட்டு ஆட்டமிழந்து சதத்தைக் கோட்டை விட்டார்.

இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் ரிஷப் பந்த் மிகப்பிரமாதமான அதிரடி காட்டி வேகப்பந்து ஸ்பின் இரண்டையும் வெளுத்துக் கட்டினார். கிரீஸை அருமையாகப் பயன்படுத்தி கட், புல்ஷாட்களை ஆடி அசத்தினார்.

120 பந்துகளில் 11 பவுண்டரிகல் 2 சிக்சர்களுடன் அவர் 85 ரன்களுடன் நாளை சதத்தை எதிர்நோக்குகிறார், அவருடன் ரஹானேவும் 75 ரன்களில் உள்ளார்.

இந்நிலையில் ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தன் ட்விட்டரில், “கேள்வியே இல்லை... ரிஷப் பந்த் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x