Published : 02 Oct 2018 09:36 AM
Last Updated : 02 Oct 2018 09:36 AM
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கடற்கரை வாலிபால் போட்டியின் பெண்கள் பிரிவில், தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான 64-வதுகடற்கரை வாலிபால் போட்டிகள் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் கடந்த மாதம் 27-ம்தேதி தொடங்கின. இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் 14, 17, 19 வயதுக்குட்பட்ட 3 பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.
4 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஆண்கள் பிரிவில் டெல்லி அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி 2-ம் இடத்தையும், குஜராத் அணி 3-ம் இடத்தையும் பெற்றன. பெண்கள் பிரிவில், தமிழ்நாடு அணி முதலிடத்தையும், குஜராத் அணி 2-ம் இடத்தையும் பிடித்தன.
17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடத்தையும், ஒடிசா அணி 2-ம் இடத்தையும், டெல்லி அணி 3-ம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடத்தையும். கோவா அணி 2-ம் இடத்தையும் பிடித்தன.
19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஆண்கள் பிரிவில் டெல்லி அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி 2-ம் இடத்தையும், கோவா அணி 3-ம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடத்தையும், தெலங்கானா அணி 2-ம் இடத்தையும் பிடித்தன.
பெண்களுக்கான போட்டிகளில் 3 பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்து தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT