Published : 29 Oct 2018 01:59 PM
Last Updated : 29 Oct 2018 01:59 PM

டாஸ் வென்றது இந்திய அணி; இரு மாற்றங்களுடன் முதலில் பேட்: மணி அடித்து தொடங்கி வைத்த சச்சின்

மும்பையில் நடந்து வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. கவுகாத்தியில் நடந்த போட்டியில் இந்திய அணியும், புனேயிலும் நடந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வென்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டி சமனில் முடிந்தது.

இந்நிலையில், 4-வது ஒருநாள் போட்டி ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடந்து வருகிறது. கடந்த போட்டியில் கலீல் அகமது இருந்தும் வேகப்பந்துவீச்சில் எந்தவிதமான தாக்கமும் இல்லை, 3 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும், ஆல்ரவுண்டர்கள் இல்லாத காரணத்தால் புனேயில் நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இதை மனதில் வைத்து இந்தப் போட்டியில் இரு மாற்றங்களை கேப்டன் கோலி செய்துள்ளார். இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், யஜுவேந்திர சாஹலை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக கேதார் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதேபோல மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மெக்காய்க்கு பதிலாக கீமோ பால் சேர்க்கப்பட்டுள்ளார். போட்டி தொடங்கும் முன் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மணி அடித்துப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவிந்திர ஜடேஜா, கலீல் அகமது ,குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா.

மேற்கிந்தியத்தீவுகள் அணி விவரம்:

கே.பாவெல், சந்தர்பால் ஹேமராஜ், ஹோப், ஹெட்மயர், சாமுவேல்ஸ், ஆர் பாவெல், நர்ஸ், ஆலன், ஹோல்டர் (கேப்டன்), ரோச், காமோ பால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x