Published : 15 Aug 2018 08:54 AM
Last Updated : 15 Aug 2018 08:54 AM
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லஷ்மண் உள்ளிட்டோர் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலி ருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போது பிசிசிஐ ஆலோ சனைக் குழுவில்(சிஏசி), சச்சின், கங்குலி, லஷ்மண் உள்ளனர். இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு சிறப்பான பயிற்சியாளர்கள் பெயரை பரிந்துரை செய்வதுதான் இந்தக் குழுவின் பணியாகும். இவர்கள் பரிந்துரை செய்யும் ஒருவரை பிசிசிஐ பயிற்சியாளராக நியமிக்கும். இந்தப் பணிக்கு ஊதியமாக இவர்கள் எதையும் பெறுவதில்லை.
இந்நிலையில் இந்த குழுவிற்கு சம்பளம் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஒருவேளை மூவருக்கும் ஊதியம் வழங்கப்பட இருந்தால், பிசிசிஐ-யின் இரட்டைப் பதவி ஆதாயத்தில் இவர்கள் சிக்குவார்கள்.
கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். அதேபோல லஷ்மண் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக உள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடுகிறார்.
இந்த நிலையில் ஏதாவது ஒரு பதவியை இவர்கள் இழக்க வேண்டும். ஒருவேளை இது அமல்படுத்தப்பட்டால் மூன்று பேரும் ஆலோசனைக் குழு வில் இருப்பார்களா என்பது சந்தேகமே.
இதனால் இவர்கள் மூவரும் தங்களது பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT