Published : 13 Aug 2018 07:57 AM
Last Updated : 13 Aug 2018 07:57 AM
தொடர்ச்சியாக 2 முறை சென்னை யின் எப்சி கால்பந்து அணி ஐஎஸ்எல் போட்டியில் பட்டம் வெல்லவேண்டும் என்று சென்னை யின் எப்சி அணியின் பயிற்சியாளர் ஜான் கிரகோரி விருப்பம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தி நிறு வனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டி: இந்தியா வில் ஐஎஸ்எல் கால் பந்துப் போட்டியில் திறமையான இளம் கால்பந்து வீரர்கள் உரு வாகி வருகின்றனர். இது மகிழ்ச்சி யான விஷயமாகும்.
கடந்த ஆண்டு சென்னை அணி பட்டம் வென்றது. இது வரை ஐஎஸ்எல் போட்டியில் 2 முறை சென்னை அணியும், 2 முறை கொல்கத்தா அணியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. 2015, 2017-ல் சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றியது.
ஆனால் தொடர்ச்சியாக 2 முறை எந்த அணியும் பட் டம் வென்றதில்லை. அந்த சாதனையை சென்னையின் எப்சி செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக வீரர் களைத் தயார்படுத்தி வருகிறேன்.
கடந்த சீசனில் சென்னை வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பாக விளையாட தீவிர முயற்சி செய்வோம்.
கோப்பையைத் தக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரி யம் அல்ல. சென்னை அணியில் மெயில்சன், கால்டி, ஜெர்ரி போன்ற வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகிறோம். இத்தாலியில் பிறந்து ஸ்பெயினில் விளையாடி வரும் ஆந்திரியா ஒர்லாண்டியை சென்னை அணிக்கு புதிதாகத் தேர்வு செய்துள்ளோம். அவருக்கு நல்ல திறமை, எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT