Published : 26 Jul 2018 08:41 AM
Last Updated : 26 Jul 2018 08:41 AM
மகளிர் உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று அயர்லாந்துடன் மோதுகிறது.
லண்டனில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பிய னும் தரவரிசையில் 2-வது இடத் தில் உள்ள அணியுமான இங்கிலாந் துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்த நிலையில் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணி அடித்த கோல் காரணமாக ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில், தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந் துடன் இன்று மோதுகிறது. அயர்லாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள வலுவான அமெரிக் காவை 3-1 என்ற கணக்கில் வீழ்த் திய உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. அதே வேளையில் முதல் ஆட்டத்தை டிரா செய்ததால் இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்தாலோ, அல்லது தோல்வியடைந்தாலோ சிக்கலை சந்திக்க நேரிடும். வெற்றி பெற முடியாத நிலை உருவானால் இந்திய அணி தனது கடைசி ஆட்டத் தில் அமெரிக்காவை அதிக கோல் கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும். அதேவேளையில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமையவேண்டும்.
இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில்,அமெரிக்காவுக்கு எதிராக அயர்லாந்து அணி விளையாடிய ஆட்டத்தின் வீடியோ காட்சிகளை பார்வையிட்டோம். அதில் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய அயர்லாந்து அணி, சிறந்த தற்காப்பு ஆட்டத்தால் கடைசி வரை முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது பாராட்டும் வகையில் இருந்தது. இதனால் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தொடக்கத்தை உருவாக்க வேண்டும். மேலும் அவர்களை அழுத்தத்திலேயே வைத்திருக்க வேண்டும். . சவாலுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT