Last Updated : 21 Jul, 2018 09:15 AM

 

Published : 21 Jul 2018 09:15 AM
Last Updated : 21 Jul 2018 09:15 AM

அரை இறுதியில் ராம்குமார்

டெல் டெக்னாலஜிஸ் ஹால் ஆஃப் பேம் டென்னிஸ் தொடரில் இந்தி யாவின் ராம்குமார் ராமநாதன் அரை இறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் தரவரிசையில் 161-வது இடத் தில் உள்ள இந்தியாவின் ராம் குமார் ராமநாதன், 98-வது இடத் தில் உள்ள கனடாவின் வசக் போஸ் பிசிலை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராம்குமார் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். புல் தரை யில் விளையாடப்படும் ஏடிபி தொட ரில் ராம்குமார் அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன் முறை. அரை இறுதியில் ராம்குமார், அமெரிக்காவின் டிம் ஸ்மைசெக்கை எதிர்த்து விளையாடுகிறார். ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் லியான்டர் பயஸ், அமெரிக்காவின் ஜெமி செர்ரிடானி ஜோடி 3-6, 6-7 என்ற நேர் செட்டில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜெக் ஜோடியிடம் தோல்வியடைந்தது. அரை இறுதியில் நெடுஞ்செழியன் ஜோடி ஸ்பெயினின் மார்சலோ அரிவாலோ, மெக்சிகோவின் மிகுவல் ஏஞ்சல் ரெய்ஸ் வரிலா ஜோடியை சந்திக்கிறது.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் சரண், அமெரிக்காவின் ஜேக்சன் வித்ரோ ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன், உக்ரைனின் செர்ஜி ஸ்ட்கோவிஸ்கி ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதியில் திவிஜ் சரண் ஜோடி, நியூஸிலாந்தின் ஆர்டெம் சிட்டாக், இஸ்ரேலின் ஜோனாதன் எர்லிச் ஜோடியுடன் மோதுகிறது. இந்த ஜோடி கால் இறுதியில் இந் தியாவின் புரவ் ராஜா, இங்கிலாந் தின் கென் குப்ஸ்கி ஜோடியை 4-6, 6-3, 10-8 என்ற செட் கணக் கில் வீழ்த்தியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x