மாநில கூடைப்பந்து போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

மாநில கூடைப்பந்து போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான 21-வது ஆண்டு மின்னொளி கூடைப்பந்து பந்து போட்டி வரும் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னை எழும்பூர் வெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமானவரி, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட், தமிழ்நாடு காவல்துறை, லயோலா கல்லூரி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மேயர் ராதாகிருஷ்ணன் கிளப் உள்ளிட்ட 34 அணிகள் பங்கேற்கின்றன.

மகளிர் பிரிவில் ரைசிங் ஸ்டார், ஜேபிஆர் இன்ஸ்டிடியுட், எத்திராஜ் கல்லூரி, தமிழக காவல்துறை, ஐசிஎஃப் உள்ளிட்ட 16 அணிகளும் கலந்து கொள்கின்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. இரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பெறும் அணிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்தகவலை மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து சங்கத்தின் கே.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in