Published : 14 Jul 2018 07:47 AM
Last Updated : 14 Jul 2018 07:47 AM
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்களுக்கு சுருண்டது.
காலே நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கருணாரத்னே 158 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4, சம்ஷி 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் போது 54.3 ஓவர்களில் வெறும் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் 49 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பெரேரா 4, சுரங்கா லக் மல் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 161 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி நேற் றைய ஆட்டத்தின் முடிவில் 37 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது.
குணதிலாக 17, கருணாரத்னே 60, மெண்டிஸ் 0, டி சில்வா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். மேத்யூஸ் 14, சில்வா 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கேசவ் மகாராஜ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 272 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி கைவசம் 6 விக்கெட்கள் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT