Last Updated : 01 Jul, 2018 06:19 PM

 

Published : 01 Jul 2018 06:19 PM
Last Updated : 01 Jul 2018 06:19 PM

பும்ராவுக்குப் பதில் தீபக் சாஹர்; வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் குருணால் பாண்டியா

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் காயமடைந்த பும்ராவுக்குப் பதிலாக சிஎஸ்கேவுக்கு ஆடிய தீபக் சாஹரும் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குருணால் பாண்டியாவும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கு வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்திய அணியில் மொஹீந்தர், சுரேந்திர அமர்நாத், பத்தான் சகோதரர்களுக்கு அடுத்தபடியாக இப்போது பாண்டியா சகோதரர்கள் முத்திரைப் பதிக்கவுள்ளனர்.

கடந்த ஜூன் 26இல் லண்டனில் பயிற்சியின் போது வாஷிங்டன் சுந்தார் வலது கணுக்கால் காயத்தினால் தொடரிலிருந்து விலக நேரிட்டது, பும்ரா இடது கை கட்டைவிரல் எலும்பு முறிவு காரணமாக ஆட முடியாமல் போயுள்ளது.

குருணால் பாண்டியா ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பைக்காக சிறப்பாக ஆடியவர், சாஹர் ஐபிஎல் அல்லாமல் இந்தியா ஏ, மற்றும் உள்நாட்டுத் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டதையடுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்தியா ஏ 4 நாள் போட்டிகளுக்காக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x