Published : 06 Jul 2018 09:09 AM
Last Updated : 06 Jul 2018 09:09 AM

இந்தோனேசியா பாட்மிண்டன்: கால் இறுதியில் சிந்து, பிரணாய்

இந்தோனேசியா ஓபன் பாட்மிண்டன் போட்டியின் கால் இறுதியில் விளையாட இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, வீரர் எச்.எஸ். பிரணாய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி. சிந்துவும், ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியும் மோதினர்.

இதில் பி.வி. சிந்து 21-17 21-14 என்ற நேர் செட் கணக்கில் அயா ஒஹோரியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். நேற்று தனது 23-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சிந்துவுக்கு இது சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது. ஆடவர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாய் 21-23 21-15 21-13 என்ற நேர் செட்களில் சீன தைபை வீரர் வாங் டிஸு வெய்யை வீழ்த்தினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x