Published : 18 Aug 2014 11:09 AM
Last Updated : 18 Aug 2014 11:09 AM

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

பெங்களூரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு நழுவியது. முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் (44-வது நிமிடத்தில்) ராபின் சிங் கோலடிக்க, இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் பாகிஸ்தான் கடுமையாகப் போராடியது. 69-வது நிமிடத்தில் 2-வது மஞ்சள் அட்டையைப் பெற்ற ராபின் சிங் வெளியேற்றப்பட்டார்.

இதன்பிறகு இந்திய அணி 10 வீரர்களுடன் விளை யாடியபோதும் பாகிஸ்தானால் கோலடிக்க முடியவில்லை. இவ்விரு அணிகளுக்கு இடையி லான 2-வது மற்றும் கடைசி போட்டி வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x