Published : 07 Mar 2025 07:49 AM
Last Updated : 07 Mar 2025 07:49 AM
பிராக்: செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்விந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் முதல் நிலை வீரரான அனிஷ் கிரியை எதிர்த்து விளையாடினார். கருப்பு காய்களுடன் விளையாடிய அர்விந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் லைவ் ரேட்டிங்கில் அர்விந்த் சிதம்பரம் உலக தரவரிசையில் 14-வது இடத்துக்கும், இந்திய வீரர்களில் 4-வது இடத்துக்கும் முன்னேறினார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, சீனாவின் வெய் யி-யை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 61-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். 7 சுற்றுகளின் முடிவில் அர்விந்த் சிதம்பரம் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், துருக்கியின் குரேல் எடிஸ் கீமர் 3.5, சீனாவிவின் வெய் யி ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். வியட்நாமின் குவாங் லியிம் லி, செக்குடியரசின் டேவிட் நவரா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவின் சாம் ஷாங்க்லாந்து, செக்குடியரசின் நுயென் தாய் டாய் வான் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளை பெற்று கடைசி இடங்களில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT