Published : 10 Jul 2018 04:30 PM
Last Updated : 10 Jul 2018 04:30 PM

ஐபிஎல் ரசிகர்களுக்கு மீண்டும் 360 டிகிரி அதிரடி காணக்கிடைக்குமா? மவுனம் கலைத்த ஏ.பி.டிவில்லியர்ஸ்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மென் ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவாரா ஆடமாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இது குறித்து மவுனம் கலைத்துள்ளார்:

“ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன், அதே போல் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி இளம் வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன், என்னிடம் திட்டமிடல் எதுவுமில்லை. இதனை நீண்டநாட்களாக என்னால் தெரிவிக்க முடியாமல் இருந்தது அவ்வளவே.

நிறைய இடத்திலிருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால் இந்த அழைப்புகள் ஏற்படுத்தும் ஆச்சரியம் எனக்கு பிடித்திருக்கிறது. என்ன செய்யப்போகிறேன் என்று தெரியாது” என்று தென் ஆப்பிரிக்க ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் காத்திருக்கும் அந்தச் செய்தி வந்து விட்டது, உங்கள் பதற்றங்களை சரி செய்து கொள்ளுங்கள், டிவில்லியர்ஸ் எங்கும் செல்லவில்லை. தன் 360 டிகிரி அதிசயங்களுடன் அவர் மீண்டும் நம்மை மகிழ்விக்க வருகிறார்” என்று பதிவிட்டுள்ளது.

முன்னதாக அவர் ஓய்வு பெறும் போது, ‘களைப்படைந்து விட்டேன், ஆற்றல் தீர்ந்து விட்டது’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x