Published : 30 Aug 2014 11:29 AM
Last Updated : 30 Aug 2014 11:29 AM
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள சூதாட்டத் தரகர்களுக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரசிகர் ஒருவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தியா பேட் செய்தபோது, அந்த நபர் 2 லேப் டாப் மற்றும் செல்போனை பயன்படுத்தி தகவல் பரிமாறியதாகக் கூறப்படுகிறது. போட்டி, தொலைக்காட்சியில் நேரடி ஒளிரபரப்பு செய்யப்பட்டாலும், அது சில விநாடிகள் தாமதமாகவே வரும். அதனால் செல்போன் மூலம் உடனுக்குடன் தகவலைப் பெற்று சூதாடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT