நானும் சிறுபிராயம் முதல் கிரிக்கெட் ஆடிவருகிறேன்... இப்படிப் பார்த்ததில்லை: இங்கிலாந்தின் காட்டடி தர்பாரை ரசிக்கும் ஆஸி. கேப்டன் பெய்ன்

நானும் சிறுபிராயம் முதல் கிரிக்கெட் ஆடிவருகிறேன்... இப்படிப் பார்த்ததில்லை: இங்கிலாந்தின் காட்டடி தர்பாரை ரசிக்கும் ஆஸி. கேப்டன் பெய்ன்
Updated on
1 min read

ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் தன் பெயருக்கேற்ற நாளாக நேற்று கிரிக்கெட் மைதானத்தில் மிகவும் கடினமான நாளை அனுபவித்தார். டிரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்து அணி 481 ரன்களைக் குவிக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்விக்குச் சமமான 242 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத தோல்வி கண்டது.

தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியதாவது:

மிகவும் கடினமான நாள். கடந்த போட்டியில் 25வது ஓவரில் தலையில் அடி வாங்கினேன் அதனால் தலைவலிகள் ஏற்பட்டது, ஆனால் இப்போது வந்திருப்பது உண்மையான தலைவலி.

ஓய்வறையில் தெரிவித்தேன், நான் குழந்தைப்பருவம் முதல் கிரிக்கெட் ஆடுகிறேன், ஆனால் இப்படியொரு கடினமான நாளை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை.

நாங்கள் தொட்டது ஒன்று கூட துலங்கவில்லை, அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கியது. பொதுவாக சிறிது நேரத்துக்கு ஒரு அணியின் ஆதிக்கம் இருக்கும் 2 விக்கெட்டுகள் போனால் ஆட்டம் மாறும் இதுதான் வழக்கம், ஆனால் நேற்று ஆட்டம் முழுதுமே எங்களைப் போட்டுப் பார்த்து விட்டது.

ஆனால் இங்கிலாந்து அடித்த அடி முன்னெப்போதும் இல்லாதது. பிட்ச் எல்லாம் காரணமல்ல நாங்கள் எதையும் சரியாக செயல்படுத்தவில்லை.

அதுவும் அமைதியாக ஆடுவது முடியாத காரியம், அதுவும் மைதானம் முழுதும் பந்துகளை பேட்ஸ்மென்கள் தெறிக்க விடும்போது பவுலர்கள் அமைதிகாப்பது மிகவும் கடினம்.

இது மாதிரியான ஒரு அனுபவம் தேவை, இது வீரர்களுக்கு ஒரு பாசிட்டிவ் ஆற்றலைத் தரும் என்று நம்புகிறேன், கடினமான பாடங்கள்தான் வீரர்களை வலுப்பெறச்செய்யும்.

இவ்வாறு கூறினார் டிம் பெய்ன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in