Published : 08 Jun 2018 10:27 AM
Last Updated : 08 Jun 2018 10:27 AM

யு- 19 கிரிக்கெட் அணியில் சாதனை வீரர் சச்சின் மகனுக்கு இடம்

சாதனை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு தனி இடம் உண்டு. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான சச்சின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன் குவித்த சாதனையையும் செய்துள்ளார். இதனால் அவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் எனவும் புகழப்படுகிறார்.

சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கரும், சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வருகிறார். 18 வயதாகும் அர்ஜூன் இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவம், பேட்ஸ்மேனாகவும் உள்ளூர் அணியில் விளையாடி வருகிறார். 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான மண்டல கிரிக்கெட் அகாடமியின் பயிற்சி முகாமில் அர்ஜூன் இடம் பெற்றிருந்தார். அதில் அவரது செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தன. இதையடுத்து. இந்திய யு-19 அணியில் தேர்வாகி உள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி, 2 நான்கு நாள் போட்டியிலும், 5 ஒருநாள் போட்டியிலும் விளையாட உள்ளது. இதில், 4 நாள் போட்டிக்கான அணியில் அர்ஜூன் இடம் பெற்று விளையாடுகிறார்.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x