Published : 15 May 2018 07:31 AM
Last Updated : 15 May 2018 07:31 AM

தங்கம் வென்றார் ஹீனா சித்து

ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் அடுத்த வாரம் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெறுகிறது. இதையொட்டி ஹனோவர் நகரில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவி இறுதி சுற்றில் இந்தியாவின் ஹீனா சித்துவும், பிரான்சின் மதில்டேவும் தலா 239.8 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட டையில் ஹீனா சித்து வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதேபிரி வில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான ஸ்ரீ நிவேதா 219.2. புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x