

சென்னை: 33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்த சூழலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் மற்றும் அதன் தேதி, நேரம் முதலியவை வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக தடகளத்தில் 29 பேர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். ஆடவர் 18, மகளிர் 11 என தடகள வீரர்கள், வீராங்கனைகளின் எண்ணிக்கை உள்ளது.
துப்பாக்கி சுடுதல் 21, ஹாக்கி 19, டேபிள் டென்னிஸ் 8, பாட்மிண்டன் 7, மல்யுத்தம் 6, வில்வித்தை 6, குத்துச்சண்டை 6, கோல்ஃப் 4, டென்னிஸ் 3, நீச்சல் 2, பாய்மர படகுப் போட்டி 2, குதிரையேற்றம், ஜுடோ, துடுப்பு படகு, பளுதூக்குதலில் தலா ஒருவர் பங்கேற்கின்றனர். இதில் 7 ரிசர்வ் வீரர்களும் அடங்குவர்.
இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் விவரம்: