Published : 15 May 2018 11:24 AM
Last Updated : 15 May 2018 11:24 AM

அவர்கள் பேட்டிங் வரிசையைக் கண்டு நாங்கள் அச்சப்படுவோம் என கிங்ஸ் லெவன் நினைத்தது: விராட் கோலி

இந்தூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆர்சிபி அணி மீண்டெழுந்து கிங்ஸ் லெவன் அணியை 88 ரன்களுக்குச் சுருட்டி பிறகு கோலி, பார்த்திவ் சரவெடி பவுண்டரிகளில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்று பிளே ஆஃப் தகுதியை உயிருடன் வைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறும்போது, “கடந்த வாரம் கிரேஸி. நாங்கள் கீழே இருக்கிறோம், வெளியேறுவோம் என்றே நினைத்தோம்.

ஆனால் அட்டவணை திடீரென எங்களுக்காகத் திறந்துள்ளது. இப்போது எங்களுக்கு 2 போட்டிகளில் 2 வெற்றிகள் தேவை அவ்வளவே.

கிங்ஸ் லெவன் அணி அவர்கள் பேட்டிங் வரிசையினால் எங்களை லேசாக அச்சுறுத்தலாம் என்று நினைத்தது. ஆனால் பவுலர்கள் வீசிய விதம் அவர்கள் தவறுகள் செய்ய வாய்ப்பில்லை என்பதை அறிவுறுத்தியது.

அவர்கள் அணியில் புதிர் ஸ்பின்னர் (முஜீப் உர் ரஹ்மான்) இல்லை. அதனால் பெரிய அளவுக்கு ரன்களைக் குவிக்க ஆடுவார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். நாங்கள் அவர்களை சந்தேகத்தில் வைத்தோம்.

டாஸ் முக்கியமானது, அவர்களிடத்தில் முக்கிய ஸ்பின்னர். கடந்த போட்டியில் 180 ரன்களை விரட்டினோம், அதனால் இந்த ஆட்டத்திற்கு நல்ல உத்வேகத்துடன் வந்தோம். பேட்ஸ்மென்கள் நாங்கள் பொறுப்பை கையிலெடுக்க விரும்பினோம்.

எங்களிடம் நல்ல உத்வேகம் இருந்தது என்றே நினைக்கிறேன். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் ஆடும் ஒரு அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் விரும்ப மாட்டார்கள். சரியான மனநிலையில் இருப்பது அவசியம், தகுதி பெறுவது பற்றி அதிகம் யோசிக்கக் கூடாது” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x