Published : 28 Aug 2014 10:00 AM
Last Updated : 28 Aug 2014 10:00 AM

உலக பாட்மிண்டன் 3-வது சுற்றில் சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் சிந்து 21-12, 21-17 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் ஓல்கா கோலோவனோவாவைத் தோற்கடித்தார். அடுத்த சுற்றில் கொரியாவின் இயோன் ஜூ பேவை சந்திக்கிறார் சிந்து.

ஆடவர் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமித் ரெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் ஜப்பானின் ஹிரோகட்ஸு-நோரியாஸு ஹிரட்டா ஜோடியைத் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி ஜோடியான ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி தங்களின் 2-வது சுற்றில் 16-21, 8-21 என்ற நேர் செட்களில் சீனாவின் கிங் டியான்-யூன்லெய் ஜாவோ ஜோடியிடம் தோல்வி கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x