சென்னை டெஸ்ட்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்பிரிக்க அணி

சென்னை டெஸ்ட்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்பிரிக்க அணி
Updated on
1 min read

சென்னை: இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்றது.

சென்னையில் இந்த டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற அந்த அணி 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.

3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. அன்னேக்கே போஷ் 9, சுனே லுஸ் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் லாரா வோல்வார்ட் 93 ரன்களும், மரிஜான் காப் 15 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in