Published : 16 May 2018 08:21 PM
Last Updated : 16 May 2018 08:21 PM
இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு லாபங்களை வெளியிட்டுள்ளது, அதாவது கடந்த சாதனைகளை முறியடிக்கும் விதமாக 14 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை வாரியம் நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதாவது 2.12 பில்லியன் ரூபாய்கள் (14 மில்.டாலர்கள்) 2017-ல் லாபம் ஈட்டியதாக வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கும் இலங்கை அணி 2017-ல் அடைந்த மாபெரும் தோல்விகளுக்கும் சம்பந்தமில்லை.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வருவாயும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்துள்ளது, நிகர லாபம் 33 மடங்கு அதிகரித்துள்ளது.
இது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உத்திபூர்வமான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சாதுரியமான நிதி நிர்வாகத்தினால் விளைந்ததாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் புதிராக லாபம் அதிகரித்தது பற்றி விரிவாக இலங்கை கிரிக்கெட் வாரியம் எதையும் கூறவில்லை.
ஆனால் 2017-ல் ஜிம்பாபவே, இந்தியா, வங்கதேச தொடர்கள் இலங்கையில் நடந்ததும் லாப அதிகரிப்புக்குக் காரணம் என்று சிலதரப்புகள் கூறுகின்றன.
இதில் குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான தொடர் பெரிய அளவில் லாபங்களில் பங்களிப்பு செய்திருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுபற்றி வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
மற்றபடி மோசமான ஆட்டத்தினால் இலங்கை அணி திணறிக் கொண்டிருக்க இந்த லாப அதிகரிப்பு அந்த வாரியத்துக்கு நற்செய்தியே.
இந்தியாவுக்கு எதிராக முழுத் தொடரையும் இழந்தார்கள், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடரை இழந்தனர்
சாம்பியன்ஸ் டிராபியிலிருந்தும் கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT