Published : 27 Aug 2014 10:00 AM
Last Updated : 27 Aug 2014 10:00 AM
20-வது ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 5 முதல் 11 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் அதில் பங்கேற்பதை உறுதி செய்திருக்கும் நடப்பு சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா மேலும் கூறியிருப்பதாவது:
7-வது ஆண்டாக சென்னை ஓபனில் பங்கேற்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். புத்தாண்டில் நடைபெறும் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஓபனில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கையோடு, ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்ற வாவ்ரிங்கா, அதில் நடாலை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT