Published : 10 May 2018 07:16 AM
Last Updated : 10 May 2018 07:16 AM
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் பி. சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ள னர்.
இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரணீத், இஸ்ரேல் வீரர் மிஷா ஜில்பர்மேனுடன் மோதி னார். இதில் சாய் பிரணீத் 21-17, 21-14 என்ற கணக்கில் மிஷாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் சாய் பிரணீத், இந்தோனேசிய வீரர் பாஞ்சி அகமது மவுலானாவுடன் மோதுகிறார்.
மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா 13-21, 21-17, 21-12 என்ற கணக்கில் நியூஸிலாந்து வீரர் அபிநவ் மனோட்டோவைத் தோற்கடித்து 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
இதே பிரிவில் நடைபெற்ற பிறிதொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெய்ராம் தோல்வி கண்டார். ஜப்பான் வீரர் ரிச்சி தக்கேஷிடா 20-22, 22-20, 21-17 என்ற கணக்கில் அஜய் ஜெய்ராமை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜக்கா வைஷ்ணவி ரெட்டி 19-21 21-15 21-15 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை ஜார்ஜினாவை வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT