Published : 11 Apr 2018 01:59 AM
Last Updated : 11 Apr 2018 01:59 AM

என்னுடைய நாடித்துடிப்பும் எகிறியது: வெற்றிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவின் மிகப்பெரிய இலக்கை நொறுக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கும் முன் காவிரிப் போராட்டம் தொடங்கிய பிறகு ரஸலுடன் போராட்டம் பிறகு இலக்கை விரட்டும்போது டென்ஷன் பரபரப்பு என்று சென்னை வெற்றி அமைந்தது.

இந்நிலையில் அபார வெற்றிக்குப் பிறகு கேப்டன் தோனி கூறியதாவது:

2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இங்கு வெற்றி பெறுவது நல்ல உணர்வை தருகிறது. முதல் இன்னிங்ஸ், 2வது இன்னிங்ஸ் இரண்டுமே ரசிகர்களுக்குத் தகுதியான இன்னிங்ஸ்களே.

அனைவருக்குமான உணர்ச்சி மட்டங்கள் உண்டு. ஆனால் இங்கு வீர்ர்கள் அமரும் இடத்தில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பவுலர் மீதும் பேட்ஸ்மென் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். பாசிட்டிவ் ஆன ஆற்றல் உதவுகிறது.

என்னுடைய நாடித்துடிப்பும் எகிறியது, அதனால்தான் ஓய்வறை என்ற ஒன்று உள்ளது. என் உணர்வுகளை நான் ஓய்வறையில் மறைவாகவே வெளிப்படுத்துவேன், இங்கு வெளியில் அமரும்போது கிடையாது. களத்தில் நம் உணர்வுகளை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டினால் வர்ணனையாளர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு இடம் கொடுப்பதாகும்.

சாம் பிலிங்ஸ் இப்படிப்பட்ட ஆட்டத்தை ஆடிப்பார்ப்பது நன்றாக இருக்கிறது. ஆம் நாங்களும் ரன் கொடுத்தோம், கொல்கத்தா நன்றாக பேட் செய்தார்கள். இரு அணி பவுலர்களுக்கும் கஷ்ட காலம்தான். ஆனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x