Published : 26 Apr 2018 08:07 AM
Last Updated : 26 Apr 2018 08:07 AM

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா, சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்; ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் அசத்தல்

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் காமன்வெல்த் சாம்பியனான சாய்னா நெவால் 21-12, 21-9 என்ற நேர் செட்டில் சிங்கப்பூரின் ஜியா மினை வீழ்த்தினார். 2-வது சுற்றில் சாய்னா சீனாவின் காவோ ஃபாஞ்சியுடன் மோதுகிறார். அதேவேளையில் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 21-14, 21-19 சீன தைபேவின் பை யூவை வீழ்த்தினார். 2-வது சுற்றில் சிந்து, சீன வீராங்கனையான சென் சியாக்ஸினை சந்திக்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில்முதல் சுற்றில் காமன் வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்த்து விளையாடினார். இதில் ஸ்ரீகாந்த் 13-21, 21-16, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் ஹாங்காங்கின் வாங் விங் கி வின்சென்ட்டுடன் மோதுகிறார் ஸ்ரீகாந்த். மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா 21-23, 17-21 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் தியன் செனிடம் தோல்வியடைந்தார்.

ஆடவர் இரட்டையரில் இந்தியாவின் அர்ஜூன், ராமச்சந்திரன் ஜோடியும் மகளிர் இரட்டையரில் மெக்னா, பூர்விஷா ஜோடியும் 2-வது சுற்றுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் சவுரப் வர்மா, அனுஷ்கா பாரிக் ஜோடி தோல்வி கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x