Published : 22 Apr 2018 08:23 AM
Last Updated : 22 Apr 2018 08:23 AM

இறுதி சுற்றில் ரபேல் நடால்

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபேல் நடால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மொனாக்கோவின் மான்டே கார்லோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் முதல் நிலை வீரரான ஸ்பெயின் ரபேல் நடால், அரை இறுதியில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார். இதில் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் நடால் ஜப்பானின் நிஷி கோரி அல்லது ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவுடன் மோதக்கூடும். 31 வயதான நடால் மான்டே கார்லோ தொடரில் ஏற்கெனவே 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இம்முறையும் அவர் கோப்பையை வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x