Published : 19 Apr 2018 12:42 PM
Last Updated : 19 Apr 2018 12:42 PM

‘‘போட்டியை புனேவுக்கு மாற்றினால் என்ன? - விசில்போடு எக்ஸ்பிரஸ் ’’ சென்னையில் இருந்து தனி ரயிலில் புறப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள்

 புனேவில் நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை காண்பதற்காக  தனி ரயிலில் புனே புறப்பட்டுப் சென்றுள்ளனர் அந்த அணியின் ரசிகர்கள்.

காவிரி வாரியம் அமைக்கக் கோரிய தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் கட்சிகள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸின் உள்ளூர் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.

2 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பிய நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் இது தொடர்பாக தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் புனேவில் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியுடன் மோதும் போட்டியை காண விசில்போடு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புனேவுக்கு செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் ஒன்று புறப்பட்டது.

அந்த ரயிலின் அனைத்து இருக்கைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களால் நிரப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற ஆடையுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடியுடனும் ரசிகர்கள் தங்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சென்னை சூப்பர் அணியின் மீதான சென்னை ரசிகர்களின் அன்பு பாராட்டுக்குரியது என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x