Published : 03 Apr 2018 05:00 PM
Last Updated : 03 Apr 2018 05:00 PM

மும்பை புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்

 ஐபிஎல் போட்டிகள் வரும் 7-ம் தேதி தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கின்றனர்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது.

ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி நடைபெறவுள்ள மும்பைக்கு இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையிலிருந்து விமான நிலையம் புறப்பட்டனர்.

இது தொடர்பான புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் பதிவேற்றியுள்ளது. சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராமில் மும்பையை நோக்கி என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை வீரர்கள் சந்திக்கின்றனர்.

தொடக்க நிகழ்ச்சியை பிரம்மாண்ட முறையில் நடத்த ஐபில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடனம் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x