Published : 21 Apr 2024 05:28 AM
Last Updated : 21 Apr 2024 05:28 AM

சென்னையில் மே 3-ம் தேதி யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

சென்னை: சென்னை நகரத்துக்குட்பட்ட யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் மே 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ‘பி’ மைதானத்தில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையை இருப்பிடமாக கொண்டவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வீரர்கள் 2012-ம் ஆண்டு செப்படம்பர் 1-ம் தேதி அன்று அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களாகவும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் சென்று பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு நேற்று தொடங்கியது. வரும் 26-ம் தேதி மாலை 6 மணி வரை வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். வீரர்களின் விவரங்களை சரிபார்த்த பின்னர் அவர்கள் தேர்வில் கலந்து கொள்வதற்கான தகவல் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x