Published : 19 Apr 2018 03:32 PM
Last Updated : 19 Apr 2018 03:32 PM

அன்புக்கு நான் அடிமை: சென்னை ரசிகர்களுக்கு ஹர்பஜன் சிங் ட்வீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை காண தனி ரயிலில் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் அன்புக்கு நான் அடிமை என்று ஹர்பஜன் சிங் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

காவிரி வாரியம் அமைக்கக் கோரிய தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் கட்சிகள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸின் உள்ளூர் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.

2 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பிய நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் இது தொடர்பாக தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் புனேவில் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியுடன் மோதும் போட்டியை காண விசில்போடு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனேவுக்கு ரயில் ஒன்று சென்னை சூபர் கிங்ஸ் ரசிகர்களுடன் புறப்பட்டு சென்றுள்ளது..

மஞ்சள் நிற ஆடையுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடியுடனும் ரசிகர்கள் தங்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை". அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை!நீங்க வேற லெவல் மாஸ் யா... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x