‘கேப்டன் மாற்றத்தால் வித்தியாசம் இருக்காது’ - ஹர்திக் பாண்டியா

‘கேப்டன் மாற்றத்தால் வித்தியாசம் இருக்காது’ - ஹர்திக் பாண்டியா
Updated on
1 min read

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்க உள்ளது. இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது.

“கேப்டன் மாற்றம் என்பது வித்தியாசமாக இருக்காது. ரோஹித் சர்மா எப்போதும் எனக்கு உதவுவார். அவர், தலைமையில் மும்பை அணி சாதித்துள்ளது. இதை நான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நான் எனது முழு கிரிக்கெட் வாழ்க்கையையும் அவருக்கு கீழ் விளையாடி உள்ளேன், ஐபிஎல் சீசன் முழுவதும் அவர் என் தோளில் கை போட்டு அழைத்துச் செல்வார். அதேவேளையில் ரசிகர்களையும் நாங்கள் மதிக்கிறோம். என்ன தேவையோ அதை அறிந்து விளையாட்டில் கவனம் செலுத்துகிறோம். எனது உடலில் எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்து ஆட்டங்களிலும் விளையாட திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in