Published : 23 Feb 2018 08:39 AM
Last Updated : 23 Feb 2018 08:39 AM

அரை இறுதியில் ஆந்திரா

விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது ஆந்திரா அணி.

டெல்லியில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 32.1 ஓவரில் வெறும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 38, துருவ் ஷோரே 21 ரன்கள் சேர்த்தனர். ஆந்திரா அணி தரப்பில் சிவ குமார் 4, பார்கவ் பாத் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

112 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆந்திரா அணி 28.4 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அஸ்வின் ஹெபார் 38, ரிக்கி புயி 36, சுமந்த் 25 ரன்கள் சேர்த்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆந்திரா அணிஅரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால் இறுதியில் பரோடா அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது சவுராஸ்டிரா அணி. 248 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சவுராஸ்டிரா அணி 48.4 ஓவரில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x