Published : 22 Feb 2018 03:52 PM
Last Updated : 22 Feb 2018 03:52 PM

ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டரா? - ரோஜர் பின்னி கேள்வி

ஹர்திக் பாண்டியாவுக்கு ஆல்ரவுண்டர் என்ற அடையாளம் கிடைத்தது அவரது அதிர்ஷ்டம் என்று முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

அதுவும் கபில்தேவ்வுடன் போய் ஒப்பிடுவதா என்று கேட்கிறார் ரோஜர் பின்னி, அவர் தனது பந்து வீச்சினால் அணியில் நீடிக்கிறார் என்று கருதுகிறார் ரோஜர்.

ஆங்கில ஊடகம் ஒன்றில் ரோஜர் பின்னி கூறியதாவது:

அவர் ஆல்ரவுண்டராகப் பார்க்கப்படுவது அவரது அதிர்ஷ்டம், பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை. பந்து வீச்சில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதால் அணியில் நீடிக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை வைத்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார், ஆனால் டெஸ்ட் வேறு, இந்த கிரிக்கெட் வேறு. இந்த வடிவத்தில் ரன் எடுக்கலாம் காரணம் களவியூகம் பரவலாக இருக்கும்.

கபில்தேவ் உள்நாட்டு கிரிக்கெட்டை நன்றாகப் பயன்படுத்தி ரன்களைக் குவித்தவர், முதல் தர கிரிக்கெட்டில் சதங்களை எடுத்த பிறகுதான் கபில்தேவ் டெஸ்ட் அணிக்கு வந்தார். ஆனால் பாண்டியா உள்நாட்டு கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை எடுத்ததில்லை. டாப் லெவலுக்கு வருவதற்கு முன்பாக முதல் தர கிரிக்கெட்டில் ரன்கள் எடுக்க வேண்டாமா?

என்கிறார் ரோஜர் பின்னி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x