Published : 03 Feb 2018 08:46 AM
Last Updated : 03 Feb 2018 08:46 AM

செய்தித் துளிகள்:அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

வங்கதேச அணிக்கு எதிரான சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 138 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 504 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் 196, தனஞ்ஜெயா டி சில்வா 173 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். ரோஷன் சில்வா 87, சந்திமால் 37 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் உள்ளனர். 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.

இந்திய ஓபன் பாட்மிண்டன் தொடரின் கால் இறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் 8-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பீட்ரிஸ் கொர்ரலேஸை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

முத்தரப்பு டி 20 தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்று வரும் ஆர்சிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், அமெரிக்காவின் ஜோ சாலிஸ்பரி ஜோடி 6-3, 2-6, 17-15 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்சின் ரூபன் கோன்ஸலஸ், அமெரிக்காவின் ஹன்டர் ரீஸி ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x