Published : 17 Feb 2018 08:41 AM
Last Updated : 17 Feb 2018 08:41 AM

சென்னை ஓபன் சாலஞ்சர் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் யுகி பாம்ப்ரி- இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன்

சென்னை ஓபன் சாலஞ்சர் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி 7-5, 6-2 என்ற நேர் செட்டில் தென் கொரியாவின் லீ டக் ஹீயை வீழ்த்தினார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்சன் 6-1, 7-6 என்ற நேர் செட்டில் ஸ்பெயின் வீரர் பெட்ரோ மார்ட்டின்ஸை தோற்கடித்தார்.

இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, விஷ்ணுவர்தன் ஜோடி 7-6 (5), 5-7, 10-5 என்ற செட் கணக்கில் செர்பியாவின் டேனிலோ பெட்ரோவிக், துருக்கியின் செம் ஐல்கல் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இன்று பிற்பகல் 2.45 மணி அளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் யுகி பாம்ப்ரி - ஜோர்டான் தாம்ப்சன் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x