Published : 08 Feb 2018 10:40 AM
Last Updated : 08 Feb 2018 10:40 AM

சதம் அடிப்பது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 34-வது சதத்தை விளாசிய விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

கேப்டவுன் ஒருநாள் போட்டியில் கோலியின் அதி அற்புத 160 நாட் அவுட்டால் இந்தியா தெ.ஆப்பிரிக்காவை சரணடையச் செய்தது.

இப்போட்டியில், விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 34-வது சதத்தை விளாசினார். இதற்கு சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மைதானத்தில் இறங்கி சதங்களை விளாசுவது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு பாராட்டுகள். இன்னும் அதிஅதிக ரன்களை குவிக்கவும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x