Published : 22 Feb 2018 08:47 AM
Last Updated : 22 Feb 2018 08:47 AM

டி 20 ஆட்டம் மழையால் ரத்து

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டி 20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

செஞ்சுரியன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. இடைவிடாது மழை பெய்ததால் 2 மணி நேரத்துக்கு பிறகு ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 5 போட்டிகள் கொண்ட இந்த டி 20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி டி 20 ஆட்டம் 24-ம் தேதி கேப்டவுனில் நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் ஒரே சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்க மண்ணில் இரு தொடர்களை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x